(ஆர்.தஷ்வினி)
வாகரை அன்மித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு EYE power Network அமைப்பின் ஏற்பாட்டில் கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் ஒழுங்கமைப்பில் ஆரம்ப கட்டமாக 03 பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்/ககு/வம்மிவட்டவான் கலைமகள் வித்தியாலயம்,மட்/ககு/மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை,மட்/ககு/கண்டலடி அருந்ததி வித்தியாலயம் என மொத்தமாக 03 பாடசாலைகளை தெரிவு செய்து EYE POWER NETWORK அமைப்பின் தலைவர் இராஜரெட்னம் நிரோசன்,மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள்,
பாடசாலை அதிபர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள் முன்னிலையில் 50 ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.





0 comments:
Post a Comment