Monday, December 22, 2025

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

 






(ஆர்.தஷ்வினி)

வாகரை அன்மித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில்  தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கு EYE power Network  அமைப்பின் ஏற்பாட்டில் கல்குடா வலயக் கல்வி  பணிப்பாளர் ஒழுங்கமைப்பில் ஆரம்ப கட்டமாக   03 பாடசாலைகளுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.


மட்/ககு/வம்மிவட்டவான் கலைமகள்  வித்தியாலயம்,மட்/ககு/மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை,மட்/ககு/கண்டலடி அருந்ததி வித்தியாலயம்  என மொத்தமாக 03 பாடசாலைகளை தெரிவு செய்து   EYE POWER NETWORK  அமைப்பின் தலைவர்  இராஜரெட்னம் நிரோசன்,மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள்,

 பாடசாலை  அதிபர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள் முன்னிலையில்      50 ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment