Wednesday, March 11, 2026

மட்/அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!






(ஆர். நிரோசன்)

மட்டக்களப்பு மட்/அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (11) புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் வி. முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஜி. முகமட் பாசில் அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் விளையாட்டிற்கான உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி. லவக்குமார் அவர்களும், கௌரவ அதிதியாக விஞ்ஞான பாடத்திட்டத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ். ஞானசேகரன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.



இல்ல விளையாட்டுப் போட்டியின் முடிவில் யமுனை இல்லம் 739 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், கங்கை இல்லம் 695 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், காவேரி இல்லம் 685 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.



இந்நிகழ்வில் நடைபெற்ற வண்ணமயமான அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் பேண்ட் வாத்திய நிகழ்ச்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!!

 



மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(10) செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.


இப்போட்டியானது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் இடம் பெற்றது மற்றும் புளியந்தீவு மெதடிஸ் தேவாலயே தலைமை போதகர் ஏ.சேம் சபேந்திரன் அவர்களின் இறை பிரார்த்தனையுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன.


இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பிரதி  பணிப்பாளர் என். குகதாசன்,  இலங்கை 38-வது இராணுவபடை அதிகாரி மேஜர் கே. எம். தமீம் அவர்களும் கௌரவ அதிதிகளாக. மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான

உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், முன்னாள் பாடசாலை பழைய மாணவர் சங்கத் தலைவர் வை.கோபிநாத் , பாடசாலையின் செயலாளர் யூ.மயூரன், மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான ஆசிரியர்களின் ஆலோசகர் கே.ரவீந்திரன்,சாட்டர்லைட்  விளையாட்டுக் கழக தலைவர் சக்திரமணன், லண்டனின் உள்ள சாட்டர்லைட் உறுப்பினர் ஜி. ஜீவகுமார்  ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


இவ் விளையாட்டு போட்டியின் முடிவில் காட்மன் இல்லம் 357 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,சோமநாதர் இல்லம் 349 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,

ஓல்ட் இல்லம் 313 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும்,

கோல்டன் இல்லம் 292 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.


இப்போட்டிகளில் இடம் பெற்ற ஆயுதங்களை ஏந்திய வண்ணமான அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து  கொண்டு சிறப்பித்தனர்.


(ஆர்.நிரோசன்)

Thursday, March 5, 2026

150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கோலாகல இல்ல விளையாட்டுப் போட்டி!!

 











 மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை தனது 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 2026ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியை கடந்த புதன்கிழமை (04) மாலை 3.00 மணியளவில் வெப்பர் மைதானத்தில்  சிறப்பாக நடத்தியது.


பாடசாலை அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அருட்தந்தை கிளமென்ட் அன்னதாஸ் அவர்களின் ஆசீர்வாதச் செய்தியுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகம் (குழந்தை மருத்துவம்) தலைமை விரிவுரையாளர் டாக்டர் ஏஞ்சலா அருள்பிரகாசம் அந்தோணி அவர்கள் கலந்து கொண்டார்.


கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி (நிர்வாகம்) அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி என். மகேந்திரகுமார் மற்றும் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி உடற்கல்வி விரிவுரையாளர் திருமதி டி. மோகனக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிறப்பு அதிதிகளாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி டி. பவன் மற்றும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் வைத்தியர் நிரோஜா விமலராஜன் ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.


போட்டிகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ரீடா இல்லம் 524 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை கைப்பற்றியது. 434 புள்ளிகளுடன் காசில்டா இல்லம் இரண்டாம் இடத்தையும், 420 புள்ளிகளுடன் மாறி இல்லம் மூன்றாம் இடத்தையும், 302 புள்ளிகளுடன் கான்சிலியா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றன.


அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி மற்றும் பேண்ட் வாத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன. பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


(ஆர்.நிரோசன்)

Monday, March 2, 2026

மட்டக்களப்பில் "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்திட்ட நிகழ்வுகள்!!











அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.


அதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஸ் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் இன்று (01) இடம் பெற்றன.


இதன் போது "விற்கின்ற - அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்" - அகன்று செல்" எனும் வாசகத்தினை மையமாகக் கொண்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


மார்ச் மாதம் 01 முதல் "முழு நாடும் ஒன்றாக - தேசிய செயல்" திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது.


மேலும் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் கொண்ட ஸ்டிக்கர்கள் பேருந்துகள், முற்சக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


எமது நாட்டின் வளமான மாணவர்கள், இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் பற்றிய தகவல்களை 1818 எனும் இலக்கத்தினுடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இந் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள் சாரணமானவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, February 17, 2026

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாண்மையாளர்களை அபிவிருத்தி!






கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாண்மையாளர்களை அபிவிருத்தி செய்யும் இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி  இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர்  பேராசிரியர் பி.பிரதீபன் தலைமையில் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் செயலாளர் வை. எல். எம். நவவீயின் பங்கு பற்றுதலுடன் கிழக்கு  பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் (15) இடம் பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகமும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் தொழில்முயற்சியாண்மை, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான   இங்குபேசன் நிலையம் (Incubation Canter) கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீட வளாகத்தில் எதிர்வரும் (25) திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின்  உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் இடம் பெறவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் வலுவான பிராந்திய பொருளாதார வளர்ச்சி உயர்த்துவதற்கு பெறுமதி சேர் பொருட்களின்  தரம் மற்றும் செயல்திறன் மதிப்பீடு, வணிகத் திட்ட வழிகாட்டுதல், சந்தை இணைப்பு உதவிகள், தயாரிப்பு சோதனைகள், பொதியிடல் வழிகாட்டுதல், லேபளிங் மற்றும் பிராண்டிங் ஆலோசனை வழங்கள், தொழில்முனைவோருக்கான பயிற்சி திட்டங்கள் போன்ற பல தரப்பட்ட  சேவைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடாதிபதி டுலங்க மேனிக்கே குணுபோலகம, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் அமரசிங்கம் பகீரதன்,  விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட விதாதா உத்தியோகத்தர் கே. இலக்கணக்குமார், பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர் மற்றும் பலர்  கொண்டனர்.

இவ் இங்குபேசன் நிலையத்தினால் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகள், ஆரம்ப நிலை நிறுவனங்கள், இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME) அபிவிருத்தி நிலையம் செயற்படவுள்ளதுடன் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு பாரிய பங்களிப்பு வழங்கப்படவுள்ளது.

Sunday, February 8, 2026

கராத்தே துறையில் பெருமைமிகு சாதனை !!!







  Japan Karate Do Shotokan Study  கழகத்தினரால் 

 கிரான் மத்திய கல்லூரியில் மட்டக்களப்பு  மாவட்ட மாணவர்களுக்கான தரப்படுத்துதல் பரீட்சை  நடாத்தியது.


இத் தரப்படுதல் பரிட்சை கழகத்தின்  தலைமை போதனை ஆசிரியரான ஹெச். எம். விஜயகுமார

 அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இப் பரிட்சைக்கு பயிற்றுவிப்பாளர்களான எம். நடராஜர் ,டீ. சதானந்தகுமார் ,ஏ. ஆர். நவாஸ் , எஸ். சகாயராஜா ,ஆகியோர் மேற்பார்வையில் மட்/வாழைச்சேனை இந்து கல்லூரி தேசிய பாடசாலை கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு  கருப்பு நிறம் பட்டி  (1st Dan)  பெற்றுக் கொண்டனர்.


இவர்களுக்கான கருப்பு நிறபட்டி அணிவிக்கும் கௌரவ நிகழ்வு நேற்று (8)தினம்Japan Karate Do Shotokan Association-இன்தெற்காசியாவுக்கான தலைமை போதனா ஆசிரியரும்,தெற்காசியாவுக்கான பரீட்சகருமானஅவர்களால் மிகுந்த மரியாதையுடன் கருப்பு நிற பட்டி  அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Saturday, February 7, 2026

காகித நகர் மில்லத் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா !!







கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/ காகித நகர் மில்லத் வித்தியாலயத்தின் 25 வது வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழா நிகழ்வுகளில் புதிய நூலகம் திறந்து வைப்பு, சிறப்பு மலர் வெளியீடு, கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று 2026/02/02ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு விமர்சையாக நடைபெற்றது.

வித்தியாலய பழைய மாணவர்கள், பிரதேச தனவந்தர்களின் முழு பங்களிப்புடனும், பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்படனும் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.றிஹாஸ் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் (SLEAS) சிறப்பித்ததுடன், கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்ஷுக் (SLEAS), கோறளைப்பற்று பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் (SLEAS) , மற்றும் விஷேட அதிதிகள், சிறப்பு அதிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், ம.ம.கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், வித்தியாலய முன்னாள் அதிபர்கள், வித்தியாலய முன்னாள் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் (ஏ.எல்.எம்.சப்றாஸ்), பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வித்தியாலயத்தின் முதன் முதலாக புதிய கோலாட்ட குழுவினர் இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன்,  வித்தியாலயத்தின் கடந்த 25 ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டியில் மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவான மாணவர்கள், பிரதம அதிதி, வித்தியாலய அதிபர், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், தற்போதைய ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு நினைவுச் சின்னங்கள் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டன.

Tuesday, February 3, 2026

78 வது சுதந்திர தின நிகழ்வு!!


இலங்கை திருநாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வு  இன்று (04)








மட்டக்களப்பு கொக்குவில்-176 பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் பிரஜாசக்தி தலைவர்,கிராம அபிவிருத்தி உத்தியோஸ்தர், சமுர்த்தி  உத்தியோகத்தர் , கிராம சேவகர், கிராம சிறுவர்கள், பயிற்சிப்பாளர்கள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து  கொண்டனர்.


முன்னதாக பாடசாலை மாணவர்களின் இணைந்து சிரமதான பணிகளும்,  கொய்யா மரங்கள் வளாகத்துக்குள் நடப்பட்டது 


 சுதந்திர தின நிகழ்வில் இலங்கை நாட்டிற்கு  மரியாதை செலுத்தப்படும் வகையில் நிறைவுக்கு வந்தது.

Monday, December 22, 2025

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

 






(ஆர்.தஷ்வினி)

வாகரை அன்மித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில்  தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கு EYE power Network  அமைப்பின் ஏற்பாட்டில் கல்குடா வலயக் கல்வி  பணிப்பாளர் ஒழுங்கமைப்பில் ஆரம்ப கட்டமாக   03 பாடசாலைகளுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.


மட்/ககு/வம்மிவட்டவான் கலைமகள்  வித்தியாலயம்,மட்/ககு/மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை,மட்/ககு/கண்டலடி அருந்ததி வித்தியாலயம்  என மொத்தமாக 03 பாடசாலைகளை தெரிவு செய்து   EYE POWER NETWORK  அமைப்பின் தலைவர்  இராஜரெட்னம் நிரோசன்,மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள்,

 பாடசாலை  அதிபர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள் முன்னிலையில்      50 ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Friday, December 12, 2025

ரயில் சேவையில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி



இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

 
இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, இரண்டு பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை விடுத்தார்.

மட்டு. மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பால் நிலை அடிப்படையில் வன்முறை - விழிப்பூட்டல் நிகழ்வு



மட்டக்களப்பு, மண்முனை தென் மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பெண்களுக்கு எதிரான வண்முறையை தடுக்கும் பால் நிலை அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்திட்ட இறுதி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ( 11-12-2025ம் திகதி ) மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் நடை பெற்றது.


பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் திட்டமிடலில் , பெண்கள் அபிவிருந்தி உத்தியோகத்தர் ரி.கெளசல்யாவின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வு  நடை பெற்றது.

பெரன்டினா நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம் பெற்ற இந் நிகழ்வின் போது பால் நிலை, சமத்துவம் தொடர்பில் விழிப்பூட்டல் கருத்தரங்கும் இடம் பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன், பெரன்டினா  நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ். டினேஸ், கண்காணிப்பு உத்தியோகத்தர் எம்.பி. பவிக்காந் கலந்து உள்ளிட்டோர் கொண்டு கருத்துரைகளை வழங்கினர்

இந்நிகழ்விலும் விழிப்பூட்டல் கருத்தரங்கிலும் சுமார் 50 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.