Monday, August 3, 2026
Saturday, August 1, 2026
கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு: லக்சபான நீர்த்தேக்கப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
ஜனாதிபதியை அவமதிக்கும் பேஸ்புக் பதிவு: காவல்துறை அதிகாரி கைது
நாட்டில் நிலவும் வறட்சி: நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை!
Friday, July 31, 2026
பிறரின் பயணப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் – சுங்கத் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வானூர்தி பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம், வானூர்தி நிலைய பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.
பயணிகளுக்குத் தெரியாமலேயே போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துவதற்காக சில குற்றக் குழுக்கள் அவர்களை பயன்படுத்தும் அபாயம் நிலவுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்துத் தெரிவிக்கையில், தாம் எடுத்துச் செல்லும் பொருள் என்ன என்பது கூட தெரியாமல் பொதுமக்கள் கடுமையான குற்றச் செயல்களில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்கூட அறியாமலேயே போதைப்பொருள் கடத்தல் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரின் பெயரில் பெருந்தொகையான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பயணப் பையை தாமே பரிசோதித்தாலும் எளிதில் கண்டறிய முடியாத வகையில் போதைப்பொருட்களை மறைத்து வைக்கும் நுட்பங்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலவச வானூர்தி பயணச் சீட்டை வழங்கி வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்வதாக யாரேனும் முன்வந்தால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் சிந்திக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலகின் பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், எந்தச் சூழலிலும் தமக்குச் சொந்தமில்லாத பொதிகள் அல்லது பொருட்களை எடுத்துச் செல்ல சம்மதிக்க வேண்டாம் என இலங்கை சுங்கத் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
2 வயதில் நாம் செய்த தவறு... 60 வயதில் மறதி நோயை உருவாக்குமா? பரபரப்பு ஆராய்ச்சி முடிவுகள்!
பிரோட் பீக் மலையில் பனிச்சரிவு - நிர்மல் புர்ஜா உள்ளிட்ட 10 வீரர்கள் மாயம்!
உலகில் உயரமான மலைகளில் ஒன்றான பாகிஸ்தானின் பிரோட் பீக் (Broad Peak) மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில், உலகப் புகழ்பெற்ற மலையேறு வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேறு வீரர்கள் காணாமல் போயிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பனிச்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீர் உற்பத்திக்கு அரிசி, சீனியா? தடுக்கக்கோரும் மனுவின் மீது நீதிமன்றின் உத்தரவு
இதன்போது, மதுபான உற்பத்தி நிறுவனங்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மனு தொடர்பான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய ஒரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
Thursday, July 30, 2026
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை – ஆபத்தில் இலட்சக்கணக்கான மக்கள்
2026ஆம் ஆண்டிற்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள மொத்த 245 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கில், முதல் ஆறு மாதங்களுக்கான இலக்கு 119.3 பில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடுகையில் 118.6 சதவீத வருவாய் இலக்கை எட்டும் வகையில் திணைக்களம் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவான 117.03 பில்லியன் ரூபாய் வருவாயுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க வருவாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. ஹேமரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மதுபான உற்பத்திக்காக 17.25 மில்லியன் லீற்றர் நிர்ப்பூரண மதுசாரம் (Absolute Alcohol) பயன்படுத்தப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அது 19.6 மில்லியன் லீற்றராக அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மதுபானப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் அவ்வப்போது மதுபான விலைகளை அதிகரித்திருந்த போதிலும், பல்வேறு நிர்வாக மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் மதுவரி வருவாயை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் முடிந்துள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.