Saturday, May 30, 2026
மட்டக்களப்பில் அதிரடி முற்றுகை : பிரபல கசிப்பு வியாபாரி கைது
மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் பொசன் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட முக்கிய பிரபல கசிப்பு வியாபாரி ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்
பொசன் தினமான இன்று சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெறுவதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த முற்றுகையின் போது, சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 27.5 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏறாவூர் சிறுமி மரணம் : அண்ணன் கைது
ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.
கைப்பேசியை பயன்படுத்துவதில் அண்ணன் மற்றும் தங்கைக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதே இந்த மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் 14 வயதுடைய அண்ணன், தனது 11 வயது தங்கையின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அச்சிறுமி மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, அச்சமடைந்த அண்ணன், உயிரிழந்த தங்கையின் உடலை இழுத்துச் சென்று குளியலறைக்குள் வைத்துள்ளார். அங்கு வாளி ஒன்றில் நீரை நிரப்பி, தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தது போல் காட்டுவதற்காக அவரது தலையை அந்த நீர் வாளிக்குள் திணித்து விபத்து என ஜோடிக்க முயன்றுள்ளார்.
எனினும், உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் ஏறாவூர் பொலிஸாரின் தீவிர முதற்கட்ட விசாரணைகளின் போது சிறுவனின் இந்தச் செயல் அம்பலமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 14 வயதுடைய சந்தேக நபரான அண்ணன் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் கணவன் உயிரிழப்பு மனைவி படுகாயம்
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பெரியஉளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த அவரது மனைவி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் சொகுசு பேருந்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஈரற்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் விபத்து நால்வர் காயம்
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கம்பம் ஒன்றில் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக கல்லாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அட்டமஸ்தானாதிபதி பதவியில் அதிரடி மாற்றம்!
நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை தற்போதைய அட்டமஸ்தானாதிபதியான பல்லேகம ஹேமரதன தேரரின் பதவி தற்காலிக இடைநிறுத்தப்படுவதாக மல்வத்து மகா விகாரை இன்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிப்பதற்காக, வடமத்திய திசையின் பிரதம சங்கநாயக்கர் ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து பொருத்தப்பட்ட ஜீப் வாகனத்துடன் ஒருவர் கைது
நேற்று இரவு கொட்டாவ காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஜீப் ரக வாகனமானது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைக்கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளதுடன், முறையான வருமான வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிச் சான்றிதழ் அல்லது புகைப் பரிசோதனை அறிக்கை எதுவுமின்றி செலுத்தப்பட்டு வந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்த வாகனத்திற்காக போலியான ஆவணங்களைத் தயாரித்து, அவற்றைப்பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலும் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வித்தாரந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது
பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹங்குராங்கெத்த காவல்துறைப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
டொலருக்கு எதிராக சரிவைச் சந்திக்கும் ரூபாயின் பெறுமதி
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 5.4 சதவீதத்தினால் (5.4%) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைக்கால தரவுகள் தெரிவிக்கின்றன.
நடிகரும் காரோட்ட வீரருமான அஜித்குமாரின் தாயார் காலமானார்
"பௌத்த சாசனத்தை அழிக்க உள்நாட்டு, வெளிநாட்டுச் சூழ்ச்சிகள் அதிகரிப்பு"
உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம்
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,539.76 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
இது கடந்த விலையுடன் ஒப்பிடுகையில் 37.86 அமெரிக்க டொலர்கள் (0.84%) அதிகரிப்பாகும்.
இதேவேளை, வெள்ளியின் விலையில் வீழ்ச்சியில் பதிவாகியுள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.29 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது. இது 0.38 அமெரிக்க டொலர்கள் (0.50%) வீழ்ச்சியாகும்.
பௌத்தர்களால் கொண்டாடப்படும் "வெசாக் பூரணை தினம்" இன்று
உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள், புத்தரின் மும்முறைப் பிறப்பு நிகழ்ந்த இன்றைய வெசாக் பூரணை நாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
மட்டக்களப்பு - தாண்டவன்வெளி சந்தியில் தனியார் வங்கி ஒன்றில் தீப்பரவல்
மட்டக்களப்பு - தாண்டவன்வெளி சந்திக்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த தனியார் வங்கியில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டது.
எரிபொருளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தை சந்திக்கிறதா?
இதன் மூலம் அதன் உண்மையான சூத்திர விலை 432.59 ரூபாயாக இருக்க வேண்டும் என்ற போதிலும், அது 398 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதால் ஒரு லிட்டருக்கு 34.59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதேபோல், பெட்ரோல் 95 ரகத்தில் ஒரு லிட்டருக்கு 22.46 ரூபாய் நஷ்டம் பதிவாகியுள்ளது.
எனினும், அது சந்தையில் 382 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், ஒவ்வொரு லிட்டர் ஒட்டோ டீசலுக்கும் கூட்டுத்தாபனம் 367.70 ரூபாய் என்ற பாரிய நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
சுப்பர் டீசலைப் பொறுத்தவரை இந்த நஷ்டம் மேலும் அதிகரித்து லிட்டருக்கு 397.07 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையிலும் 325.53 ரூபாய் நஷ்டத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ளமை மின்சக்தி அமைச்சின் தரவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.