Saturday, April 11, 2026

மட்/கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி- 2026!!!










 ஆவ் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (11) சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இந்துக்கல்லூரி மைதானம் இடம்பெற்றது.


இப்போட்டியானது மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட  வித்யாலயத்தின்  அதிபர் திருமதி.ச.கி. அருள்தாஸ் தலைமையில் இடம் பெற்றது.




இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின்  உதவிக் கல்வி பணிப்பாளர் த.கோகுலகுமாரன்சிறப்பு அதிதியாகஆரம்பப் பிரிவு, பாடசாலை மேம்பாட்டுத் திட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ.பிரகாஷ்  அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


இவ் விளையாட்டு போட்டியின் முடிவில்முல்லை இல்லம் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,மருதம்  இல்லம் 148 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,நெய்தல்  138 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.


இப்போட்டிகளில் இடம் பெற்ற  அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.


Thursday, April 9, 2026

மட்/ஜோசப்வாஸ் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி- 2026!!!



மட்டக்களப்பு மட்ஜோசப்வாஸ் வித்தியாலய 2026 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(09)வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.


இப்போட்டியானது மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்யாலயத்தின்  அதிபர் சி .என். சில்வெஸ்டர் 

 தலைமையில் இடம் பெற்றது.


தாண்டவன்வளி  தேவாலயே தலைமை அருட்தந்தை டி. ஏ ஜூலியன்  அவர்களின் இறை பிரார்த்தனையுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன.


இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பிரதி (தமிழ்)  பணிப்பாளர்

 சகுந்தலா சுதர்சன்

 அவர்களும் சிறப்பு அதிதியாக

 மட்டக்களப்பு வலயக் கல்விப் பிரதி  பணிப்பாளர்ஏ.பிரகாஷ் (ஆரம்ப பிரிவு) அவர்களும் ,வலயக்கல்வி விளையாட்டிற்கான ஆசிரியர்களின் 

ஆலோசகர் கே.ரவீந்திரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக

அருட்தந்தை பிரன்னர் சிலர், ஏ.ஜே.புஷ்பராஜா (பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகர்) ,பழைய மாணவர் சங்க செயலாளர் ஏ. ஹரிஹரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


இவ் விளையாட்டு போட்டியின் முடிவில்ஜோசப்  இல்லம் 608 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,

அன்ரனி இல்லம் 500 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,

 கிங்ஸ்லி 411 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.


இப்போட்டிகளில் இடம் பெற்ற ஆயுதங்களை ஏந்திய வண்ணமான அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, ஆகியன அனைவரதும் கவ






னத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.

Thursday, March 26, 2026

ஸ்ரீகாமாக்ஷிஅம்பாள் தேவஸ்தானம் இரதோற்சவம்!!

 மட்டக்களப்பு மயிலம்பாவெளி,





ஸ்ரீகாமாக்ஷிஅம்பாள் தேவஸ்தானம் இரதோற்சவம்!!


மட்டக்களப்பு மயிலம்பாவெளி,ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானம்

 ஆலயத்தின் இரதோற்சவம் இன்று(27) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது.


 இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எதிர்வரும் 28 ஆம் தேதி தீர்த்த உற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 14, 2026

மட்/ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி!


(ஆர்.நிரோசன்)







மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரே ஒரு இந்து மகளிர் பாடசாலையான 
மட்/ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (14) திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.

இப்போட்டியானது கல்லூரியின் அதிபர்
எஸ்.டி.முரளிதரன் 
 தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வளையகல்விப் பணிப்பாளர் டி.ரவி ,  தேசிய கல்வியியல் கல்லூரியின் 
உடற்கல்வி விரிவுரையாளர்
திருமதி. டி. மோகனக்குமார்,
 உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) வி.லவக்குமார் அவர்களும் , சிறப்பு அதிதிகளாக  வளையக் கல்வி அலுவலகத்தில்  உத்யோஸ்தர்கள் 
கே. ரவீந்திரன் ,ஏ.பிரசாத் 
 ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் அணி நடை,உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், 

முதலாம் இடத்தினை 378 புள்ளிகளைப் பெற்று நளாயினி இல்லமும், இரண்டாம் இடத்தினை 334 புள்ளிகளைப் பெற்று  சாரதா இல்லமும், மூன்றாம் இடத்தினை 314 புள்ளிகளைப் பெற்று அருந்ததி இல்லமும் பெற்றுக் கொண்டது.

இதன் போது பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவிகள், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, March 11, 2026

மட்/அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!






(ஆர். நிரோசன்)

மட்டக்களப்பு மட்/அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (11) புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் வி. முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஜி. முகமட் பாசில் அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் விளையாட்டிற்கான உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி. லவக்குமார் அவர்களும், கௌரவ அதிதியாக விஞ்ஞான பாடத்திட்டத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ். ஞானசேகரன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.



இல்ல விளையாட்டுப் போட்டியின் முடிவில் யமுனை இல்லம் 739 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், கங்கை இல்லம் 695 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், காவேரி இல்லம் 685 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.



இந்நிகழ்வில் நடைபெற்ற வண்ணமயமான அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் பேண்ட் வாத்திய நிகழ்ச்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!!

 



மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(10) செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.


இப்போட்டியானது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் இடம் பெற்றது மற்றும் புளியந்தீவு மெதடிஸ் தேவாலயே தலைமை போதகர் ஏ.சேம் சபேந்திரன் அவர்களின் இறை பிரார்த்தனையுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன.


இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பிரதி  பணிப்பாளர் என். குகதாசன்,  இலங்கை 38-வது இராணுவபடை அதிகாரி மேஜர் கே. எம். தமீம் அவர்களும் கௌரவ அதிதிகளாக. மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான

உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், முன்னாள் பாடசாலை பழைய மாணவர் சங்கத் தலைவர் வை.கோபிநாத் , பாடசாலையின் செயலாளர் யூ.மயூரன், மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான ஆசிரியர்களின் ஆலோசகர் கே.ரவீந்திரன்,சாட்டர்லைட்  விளையாட்டுக் கழக தலைவர் சக்திரமணன், லண்டனின் உள்ள சாட்டர்லைட் உறுப்பினர் ஜி. ஜீவகுமார்  ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


இவ் விளையாட்டு போட்டியின் முடிவில் காட்மன் இல்லம் 357 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,சோமநாதர் இல்லம் 349 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,

ஓல்ட் இல்லம் 313 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும்,

கோல்டன் இல்லம் 292 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.


இப்போட்டிகளில் இடம் பெற்ற ஆயுதங்களை ஏந்திய வண்ணமான அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து  கொண்டு சிறப்பித்தனர்.


(ஆர்.நிரோசன்)

Thursday, March 5, 2026

150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கோலாகல இல்ல விளையாட்டுப் போட்டி!!

 











 மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை தனது 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 2026ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியை கடந்த புதன்கிழமை (04) மாலை 3.00 மணியளவில் வெப்பர் மைதானத்தில்  சிறப்பாக நடத்தியது.


பாடசாலை அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அருட்தந்தை கிளமென்ட் அன்னதாஸ் அவர்களின் ஆசீர்வாதச் செய்தியுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகம் (குழந்தை மருத்துவம்) தலைமை விரிவுரையாளர் டாக்டர் ஏஞ்சலா அருள்பிரகாசம் அந்தோணி அவர்கள் கலந்து கொண்டார்.


கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி (நிர்வாகம்) அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி என். மகேந்திரகுமார் மற்றும் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி உடற்கல்வி விரிவுரையாளர் திருமதி டி. மோகனக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிறப்பு அதிதிகளாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி டி. பவன் மற்றும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் வைத்தியர் நிரோஜா விமலராஜன் ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.


போட்டிகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ரீடா இல்லம் 524 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை கைப்பற்றியது. 434 புள்ளிகளுடன் காசில்டா இல்லம் இரண்டாம் இடத்தையும், 420 புள்ளிகளுடன் மாறி இல்லம் மூன்றாம் இடத்தையும், 302 புள்ளிகளுடன் கான்சிலியா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றன.


அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி மற்றும் பேண்ட் வாத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன. பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


(ஆர்.நிரோசன்)

Monday, March 2, 2026

மட்டக்களப்பில் "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்திட்ட நிகழ்வுகள்!!











அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.


அதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஸ் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் இன்று (01) இடம் பெற்றன.


இதன் போது "விற்கின்ற - அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்" - அகன்று செல்" எனும் வாசகத்தினை மையமாகக் கொண்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


மார்ச் மாதம் 01 முதல் "முழு நாடும் ஒன்றாக - தேசிய செயல்" திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது.


மேலும் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் கொண்ட ஸ்டிக்கர்கள் பேருந்துகள், முற்சக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


எமது நாட்டின் வளமான மாணவர்கள், இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் பற்றிய தகவல்களை 1818 எனும் இலக்கத்தினுடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இந் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள் சாரணமானவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, February 17, 2026

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாண்மையாளர்களை அபிவிருத்தி!






கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாண்மையாளர்களை அபிவிருத்தி செய்யும் இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி  இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர்  பேராசிரியர் பி.பிரதீபன் தலைமையில் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் செயலாளர் வை. எல். எம். நவவீயின் பங்கு பற்றுதலுடன் கிழக்கு  பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் (15) இடம் பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகமும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் தொழில்முயற்சியாண்மை, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான   இங்குபேசன் நிலையம் (Incubation Canter) கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீட வளாகத்தில் எதிர்வரும் (25) திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின்  உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் இடம் பெறவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் வலுவான பிராந்திய பொருளாதார வளர்ச்சி உயர்த்துவதற்கு பெறுமதி சேர் பொருட்களின்  தரம் மற்றும் செயல்திறன் மதிப்பீடு, வணிகத் திட்ட வழிகாட்டுதல், சந்தை இணைப்பு உதவிகள், தயாரிப்பு சோதனைகள், பொதியிடல் வழிகாட்டுதல், லேபளிங் மற்றும் பிராண்டிங் ஆலோசனை வழங்கள், தொழில்முனைவோருக்கான பயிற்சி திட்டங்கள் போன்ற பல தரப்பட்ட  சேவைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடாதிபதி டுலங்க மேனிக்கே குணுபோலகம, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் அமரசிங்கம் பகீரதன்,  விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட விதாதா உத்தியோகத்தர் கே. இலக்கணக்குமார், பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர் மற்றும் பலர்  கொண்டனர்.

இவ் இங்குபேசன் நிலையத்தினால் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகள், ஆரம்ப நிலை நிறுவனங்கள், இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME) அபிவிருத்தி நிலையம் செயற்படவுள்ளதுடன் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு பாரிய பங்களிப்பு வழங்கப்படவுள்ளது.

Sunday, February 8, 2026

கராத்தே துறையில் பெருமைமிகு சாதனை !!!







  Japan Karate Do Shotokan Study  கழகத்தினரால் 

 கிரான் மத்திய கல்லூரியில் மட்டக்களப்பு  மாவட்ட மாணவர்களுக்கான தரப்படுத்துதல் பரீட்சை  நடாத்தியது.


இத் தரப்படுதல் பரிட்சை கழகத்தின்  தலைமை போதனை ஆசிரியரான ஹெச். எம். விஜயகுமார

 அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இப் பரிட்சைக்கு பயிற்றுவிப்பாளர்களான எம். நடராஜர் ,டீ. சதானந்தகுமார் ,ஏ. ஆர். நவாஸ் , எஸ். சகாயராஜா ,ஆகியோர் மேற்பார்வையில் மட்/வாழைச்சேனை இந்து கல்லூரி தேசிய பாடசாலை கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு  கருப்பு நிறம் பட்டி  (1st Dan)  பெற்றுக் கொண்டனர்.


இவர்களுக்கான கருப்பு நிறபட்டி அணிவிக்கும் கௌரவ நிகழ்வு நேற்று (8)தினம்Japan Karate Do Shotokan Association-இன்தெற்காசியாவுக்கான தலைமை போதனா ஆசிரியரும்,தெற்காசியாவுக்கான பரீட்சகருமானஅவர்களால் மிகுந்த மரியாதையுடன் கருப்பு நிற பட்டி  அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.