Tuesday, February 17, 2026

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாண்மையாளர்களை அபிவிருத்தி!






கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாண்மையாளர்களை அபிவிருத்தி செய்யும் இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி  இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர்  பேராசிரியர் பி.பிரதீபன் தலைமையில் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் செயலாளர் வை. எல். எம். நவவீயின் பங்கு பற்றுதலுடன் கிழக்கு  பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் (15) இடம் பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகமும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் தொழில்முயற்சியாண்மை, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான   இங்குபேசன் நிலையம் (Incubation Canter) கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீட வளாகத்தில் எதிர்வரும் (25) திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின்  உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் இடம் பெறவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் வலுவான பிராந்திய பொருளாதார வளர்ச்சி உயர்த்துவதற்கு பெறுமதி சேர் பொருட்களின்  தரம் மற்றும் செயல்திறன் மதிப்பீடு, வணிகத் திட்ட வழிகாட்டுதல், சந்தை இணைப்பு உதவிகள், தயாரிப்பு சோதனைகள், பொதியிடல் வழிகாட்டுதல், லேபளிங் மற்றும் பிராண்டிங் ஆலோசனை வழங்கள், தொழில்முனைவோருக்கான பயிற்சி திட்டங்கள் போன்ற பல தரப்பட்ட  சேவைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடாதிபதி டுலங்க மேனிக்கே குணுபோலகம, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் அமரசிங்கம் பகீரதன்,  விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட விதாதா உத்தியோகத்தர் கே. இலக்கணக்குமார், பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர் மற்றும் பலர்  கொண்டனர்.

இவ் இங்குபேசன் நிலையத்தினால் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகள், ஆரம்ப நிலை நிறுவனங்கள், இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME) அபிவிருத்தி நிலையம் செயற்படவுள்ளதுடன் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு பாரிய பங்களிப்பு வழங்கப்படவுள்ளது.

Sunday, February 8, 2026

கராத்தே துறையில் பெருமைமிகு சாதனை !!!







  Japan Karate Do Shotokan Study  கழகத்தினரால் 

 கிரான் மத்திய கல்லூரியில் மட்டக்களப்பு  மாவட்ட மாணவர்களுக்கான தரப்படுத்துதல் பரீட்சை  நடாத்தியது.


இத் தரப்படுதல் பரிட்சை கழகத்தின்  தலைமை போதனை ஆசிரியரான ஹெச். எம். விஜயகுமார

 அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இப் பரிட்சைக்கு பயிற்றுவிப்பாளர்களான எம். நடராஜர் ,டீ. சதானந்தகுமார் ,ஏ. ஆர். நவாஸ் , எஸ். சகாயராஜா ,ஆகியோர் மேற்பார்வையில் மட்/வாழைச்சேனை இந்து கல்லூரி தேசிய பாடசாலை கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு  கருப்பு நிறம் பட்டி  (1st Dan)  பெற்றுக் கொண்டனர்.


இவர்களுக்கான கருப்பு நிறபட்டி அணிவிக்கும் கௌரவ நிகழ்வு நேற்று (8)தினம்Japan Karate Do Shotokan Association-இன்தெற்காசியாவுக்கான தலைமை போதனா ஆசிரியரும்,தெற்காசியாவுக்கான பரீட்சகருமானஅவர்களால் மிகுந்த மரியாதையுடன் கருப்பு நிற பட்டி  அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Saturday, February 7, 2026

காகித நகர் மில்லத் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா !!







கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/ காகித நகர் மில்லத் வித்தியாலயத்தின் 25 வது வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழா நிகழ்வுகளில் புதிய நூலகம் திறந்து வைப்பு, சிறப்பு மலர் வெளியீடு, கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று 2026/02/02ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு விமர்சையாக நடைபெற்றது.

வித்தியாலய பழைய மாணவர்கள், பிரதேச தனவந்தர்களின் முழு பங்களிப்புடனும், பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்படனும் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.றிஹாஸ் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் (SLEAS) சிறப்பித்ததுடன், கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்ஷுக் (SLEAS), கோறளைப்பற்று பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் (SLEAS) , மற்றும் விஷேட அதிதிகள், சிறப்பு அதிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், ம.ம.கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், வித்தியாலய முன்னாள் அதிபர்கள், வித்தியாலய முன்னாள் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் (ஏ.எல்.எம்.சப்றாஸ்), பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வித்தியாலயத்தின் முதன் முதலாக புதிய கோலாட்ட குழுவினர் இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன்,  வித்தியாலயத்தின் கடந்த 25 ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டியில் மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவான மாணவர்கள், பிரதம அதிதி, வித்தியாலய அதிபர், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், தற்போதைய ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு நினைவுச் சின்னங்கள் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டன.

Tuesday, February 3, 2026

78 வது சுதந்திர தின நிகழ்வு!!


இலங்கை திருநாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வு  இன்று (04)








மட்டக்களப்பு கொக்குவில்-176 பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் பிரஜாசக்தி தலைவர்,கிராம அபிவிருத்தி உத்தியோஸ்தர், சமுர்த்தி  உத்தியோகத்தர் , கிராம சேவகர், கிராம சிறுவர்கள், பயிற்சிப்பாளர்கள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து  கொண்டனர்.


முன்னதாக பாடசாலை மாணவர்களின் இணைந்து சிரமதான பணிகளும்,  கொய்யா மரங்கள் வளாகத்துக்குள் நடப்பட்டது 


 சுதந்திர தின நிகழ்வில் இலங்கை நாட்டிற்கு  மரியாதை செலுத்தப்படும் வகையில் நிறைவுக்கு வந்தது.

Monday, December 22, 2025

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

 






(ஆர்.தஷ்வினி)

வாகரை அன்மித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில்  தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கு EYE power Network  அமைப்பின் ஏற்பாட்டில் கல்குடா வலயக் கல்வி  பணிப்பாளர் ஒழுங்கமைப்பில் ஆரம்ப கட்டமாக   03 பாடசாலைகளுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.


மட்/ககு/வம்மிவட்டவான் கலைமகள்  வித்தியாலயம்,மட்/ககு/மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை,மட்/ககு/கண்டலடி அருந்ததி வித்தியாலயம்  என மொத்தமாக 03 பாடசாலைகளை தெரிவு செய்து   EYE POWER NETWORK  அமைப்பின் தலைவர்  இராஜரெட்னம் நிரோசன்,மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள்,

 பாடசாலை  அதிபர்கள், பாடசாலைகளின் ஆசிரியர்கள் முன்னிலையில்      50 ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Friday, December 12, 2025

ரயில் சேவையில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி



இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

 
இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுத்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, இரண்டு பெண்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை விடுத்தார்.

மட்டு. மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பால் நிலை அடிப்படையில் வன்முறை - விழிப்பூட்டல் நிகழ்வு



மட்டக்களப்பு, மண்முனை தென் மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பெண்களுக்கு எதிரான வண்முறையை தடுக்கும் பால் நிலை அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்திட்ட இறுதி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ( 11-12-2025ம் திகதி ) மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் நடை பெற்றது.


பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் திட்டமிடலில் , பெண்கள் அபிவிருந்தி உத்தியோகத்தர் ரி.கெளசல்யாவின் ஒழுங்குபடுத்தலில் இந்நிகழ்வு  நடை பெற்றது.

பெரன்டினா நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம் பெற்ற இந் நிகழ்வின் போது பால் நிலை, சமத்துவம் தொடர்பில் விழிப்பூட்டல் கருத்தரங்கும் இடம் பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன், பெரன்டினா  நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ். டினேஸ், கண்காணிப்பு உத்தியோகத்தர் எம்.பி. பவிக்காந் கலந்து உள்ளிட்டோர் கொண்டு கருத்துரைகளை வழங்கினர்

இந்நிகழ்விலும் விழிப்பூட்டல் கருத்தரங்கிலும் சுமார் 50 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.














Monday, December 8, 2025

உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !






 பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணையடி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !


மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணையடி கிராமத்திற்கு  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  120 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் இன்றைய தினம் ( 08 )  வழங்கி வைக்கப்பட்டது.


இந் நிகழ்விற்கு , பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கபிரதி நிதிகள் , மட்டக்களப்பு மாநகர சபை பிரதி முதல்வர் வை. தினேஷ்குமார் , கிராம சேவை உத்தியோகத்தர் , பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது தமது தேவையை அறிந்து பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்த பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினருக்கு பொதுமக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.


Sunday, December 7, 2025

22 வயது இளைஞன் மரணம்!!

 




மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கடந்த 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்;;ட இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்த உறவினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு தலைமையகத்திற்கு அருகில் உள்ள வங்கியின் கிளையொன்றுக்கு முன்பாகயிருந்த துவிச்சக்கர வண்டியொன்றினை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சின்னஉப்போடையினை சேர்ந்த 22வயது இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவரிடம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதுடன் இவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான வாக்குமூலம் பெறுவதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியிருந்ததாகவும் இதன்காரணமாகவே இளைஞன் நோய்தாக்கத்தி;றகுள்ளானதாகவும் தெரிவித்து உறவினர்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தினார்கள்.

குறித்த இளைஞனின் மரண விசாரணை அறிக்கை கிடைக்கவில்லையெனவும் அது தொடர்பான அறிக்கைகிடைக்கப்பெற்றதும் விசாரணைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் வீதியை மறித்து உறவினர்கள் போராட்டம் நடாத்தியதுடன் போக்குவரத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தனது மகன் சைக்கிளை எடுத்துச்சென்றது தொடர்பில் தகவல் கிடைத்ததும் உறவினர்களினால் அதனை மீளகொண்டு ஒப்படைத்தபோதிலும் தனது மகனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கைதுசெய்துள்ளதாகவும் தனது மகனை பொலிஸார் தாக்கியுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

எனினும் குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் இருந்ததாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுதடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த இளைஞனின் உறவினர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்தியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அங்குவந்த பொலிஸார் வீதியில் நின்றவர்களை வீதிக்கு அருகில் அழைத்துச்சென்று அவர்களுடன் நிலைமையினை தெளிவுபடுத்தினர். இதன்போது சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எல்.லீலாரத்தன அங்குவந்து கலந்துரையாடி இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

தமது பிள்ளை வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம்வரும்போது நல்ல நிலையிலேயே இருந்ததாகவும் இது தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் உயிரிழந்தவரின் தாயார் தெரிவித்தார்.






Tuesday, December 2, 2025

நிவாரணபஂபொருட்கள் சேகரிப்பு!!







அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணபஂபொருட்கள் சேகரிக்கும் பணி
(02) செவ்வாய்க்கிழமை  காலை 8:30 மணியளவில் பேத்தாழை பொது நூலகத்திற்கு முன்பதாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணபஂபொருட்கள் சேகரிக்கும் பணி ஆனது இடம்பெற்று கொண்டிருக்கின்றது. 


Wednesday, November 19, 2025

உள்நாடு பிரபல உணவகமொன்றின் சாப்பாட்டில் புழுக்கள் கட்டுநாயக்கா பகுதியில் சம்பவம்!!






கொழும்பு கட்டுநாயக்க மினுவாங்கொடை பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் இன்று(19) இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மட்டக்களப்பில் உள்ள  ஒரு சமூக  அமைப்பை சேர்ந்த இளைஞர்கள்  விமான நிலையத்துக்கு சென்று திரும்பி வரும்பொழுது  மதிய உணவுக்காக குறித்த உணவகத்தில் இருந்து உணவுகளை  சாப்பிடும் போது, கோழி இறைச்சி பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.


இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  ஊடக பிரிவுக்கு தெரிவித் திருந்தனர்.


உணவின் தரத்தினை பேணுவதில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 





 

Sunday, November 9, 2025

பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ்கள் பிரதி அமைச்சரினால் வழங்கி வைப்பு!!







மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ஆகிய  மாவட்டங்களில் பனைசார் கைப்பணி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான  சான்றிதழ்கள்  வழங்கும் நிகழ்வானது பனை அபிவிருத்தி சபையின் தலைவர் இ.ரவிந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இடம் பெற்றது. 


பெருந்தோட்டம் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக

கலந்துகொண்ட நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத்,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு  நிகழ்வை சிறப்பித்ததுடன், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.


ஆறு மாதம் மற்றும் ஒரு வருட கற்கை நெறிகளை பூத்தி செய்த நபர்களுக்கே குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சில பயனாளிகளுக்கு பணைசார் உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கான பெறுமதிவாய்ந்த உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1500 மேற்பட்ட குடும்பத்தினர்

பனை சார் கைப்பணிப் பொருட்கள் மற்றும் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்து வெடிநாடுகளிற்கு ஏற்றுமதி  செய்து வருகின்றனர்.


மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரதிநிதிகள், பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், சுற்றுலா துறைக்கான மாவட்ட இணைப்பாளர் வணிதா செல்லப்பெருமாள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.