பாசிக்குடா ஸ்ரீ முனை முருகன் ஆலயத்தில் 3:30 மணியளவில் முதல் சூரசம்ஹார நடைபெற்றது
சூர சம்ஹாரம் முடிவடைந்து சுவாமிக்கு பட்டுச்சாத்தி விசேட பூஜை நடைபெற்றது
முருகப்பெருமான் இரு கரங்களினால் பராசக்தி கொடுத்த வேலுடன் சென்று முதலில் சிங்கமுகன், தாரகன், அவர்களின் சேனைகள் அனைத்தையும் ஐந்து நாட்களில் அழித்தார் .
பின்பு ஆறாம் நாள் சூரபத்மன் மாத்திரமே இருந்தான் அவன் முருகன் வேலுக்கு தப்பித்து மாயாவியாக மறைந்து மாமரமாக மாறினான்
முருகன் தனது வேல் மூலம் மாமரத்தை இரண்டாகப்பிளந்து மாமரம் மயிலாகவும், சேவலாகவும் மாறியதை முருகன் மயிலை தனது வாகனமாகவும்
சேவலை தனது கொடியின் சின்னமாக மாற்றிக் கொண்டு வெற்றி முழக்கத்தோடு வளம் வந்தார்
இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் முருகப்பெருமானை நினைத்து பக்த அடியார்கள் ஆறு நாள் கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டித்து சிறப்பம்சமாகும் பாசிக்குடா ஸ்ரீ முனை முருகனை
தரிசிக்க மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்துபக்த அடியார்கள் வருகை தந்திருந்தனர்.




0 comments:
Post a Comment