மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலே பலியானதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பாவற்கொடிச்சேனை, பழங்குடியிருப்பு மடு எனும் இடத்தில் திங்கள்கிழமை (20) இரவு இடம் பெற்றதாக தெரியவருகிறது.
பாவற்கொடிச்சேனை, கண்ணகி நகர் எனும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய முத்துப்பிள்ளை கருணாநிதி என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைவாக, சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டு விசாணைகளை மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பணித்துள்ளார்.
இதேவேளை இவ்விபத்து சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments:
Post a Comment