Sunday, November 2, 2025

மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு திடிர் கள விஜயம்! ஞா.ஶ்ரீநேசன் எம்.பி




 

மட்டக்களப்பு - வவுணதீவு மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு கள விஜயத்தை இன்று (03) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மேற்கொண்டார். 


குறித்த கள விஜத்தில் பிரதேச சபை தவிசார் த.கோபலப்பள்ளை, பிரதிதவிசாளர் த.டிசாந் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோருடன் பிரதேச சபை எல்லைக்குள் உட்டபடுத்தப்பட்ட கிராமங்கள் தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 


மேலும் எதிர்வரும் காலங்களில் வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் முன் ஆயத்தங்கள், வடிகால் துப்பரவு செய்வது தொடர்பாகவும், பிரதேச மக்கள் இலகுவாக செல்லுவதற்கும் வீதிகளுக்கான பெயர் பதாதைகள் பிரதேச சபை ஊடாக அமைக்கப்பட வேண்டும் எனவும் பிரதேச சபைக்குட்பட்ட சில எல்லை புர வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும் என கோரிக்கையளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்



0 comments:

Post a Comment