Wednesday, November 19, 2025

உள்நாடு பிரபல உணவகமொன்றின் சாப்பாட்டில் புழுக்கள் கட்டுநாயக்கா பகுதியில் சம்பவம்!!






கொழும்பு கட்டுநாயக்க மினுவாங்கொடை பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் இன்று(19) இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மட்டக்களப்பில் உள்ள  ஒரு சமூக  அமைப்பை சேர்ந்த இளைஞர்கள்  விமான நிலையத்துக்கு சென்று திரும்பி வரும்பொழுது  மதிய உணவுக்காக குறித்த உணவகத்தில் இருந்து உணவுகளை  சாப்பிடும் போது, கோழி இறைச்சி பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.


இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  ஊடக பிரிவுக்கு தெரிவித் திருந்தனர்.


உணவின் தரத்தினை பேணுவதில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 





 

Sunday, November 9, 2025

பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ்கள் பிரதி அமைச்சரினால் வழங்கி வைப்பு!!







மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ஆகிய  மாவட்டங்களில் பனைசார் கைப்பணி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான  சான்றிதழ்கள்  வழங்கும் நிகழ்வானது பனை அபிவிருத்தி சபையின் தலைவர் இ.ரவிந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இடம் பெற்றது. 


பெருந்தோட்டம் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாக

கலந்துகொண்ட நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத்,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு  நிகழ்வை சிறப்பித்ததுடன், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.


ஆறு மாதம் மற்றும் ஒரு வருட கற்கை நெறிகளை பூத்தி செய்த நபர்களுக்கே குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சில பயனாளிகளுக்கு பணைசார் உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கான பெறுமதிவாய்ந்த உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1500 மேற்பட்ட குடும்பத்தினர்

பனை சார் கைப்பணிப் பொருட்கள் மற்றும் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்து வெடிநாடுகளிற்கு ஏற்றுமதி  செய்து வருகின்றனர்.


மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரதிநிதிகள், பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், சுற்றுலா துறைக்கான மாவட்ட இணைப்பாளர் வணிதா செல்லப்பெருமாள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sunday, November 2, 2025

மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு திடிர் கள விஜயம்! ஞா.ஶ்ரீநேசன் எம்.பி




 

மட்டக்களப்பு - வவுணதீவு மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு கள விஜயத்தை இன்று (03) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மேற்கொண்டார். 


குறித்த கள விஜத்தில் பிரதேச சபை தவிசார் த.கோபலப்பள்ளை, பிரதிதவிசாளர் த.டிசாந் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோருடன் பிரதேச சபை எல்லைக்குள் உட்டபடுத்தப்பட்ட கிராமங்கள் தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 


மேலும் எதிர்வரும் காலங்களில் வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் முன் ஆயத்தங்கள், வடிகால் துப்பரவு செய்வது தொடர்பாகவும், பிரதேச மக்கள் இலகுவாக செல்லுவதற்கும் வீதிகளுக்கான பெயர் பதாதைகள் பிரதேச சபை ஊடாக அமைக்கப்பட வேண்டும் எனவும் பிரதேச சபைக்குட்பட்ட சில எல்லை புர வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும் என கோரிக்கையளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்



மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில் அத்துமீறி காடுகளை அழித்தல், பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல் யார்?





 


மட்டக்களப்பில் ஏறாவூர்ப்பற்றில் உள்ள கால்நடை வளர்ப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு கித்துள் பிரதேசத்தில் உள்ள மேசக்கல் மேய்ச்சல் தரைப் பிரதேசத்திற்கு( 01) பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் சென்றிருந்தார்.


அவ்வேளையில் சுமார் 50 பண்ணையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தார்கள்.

அந்த வகையில் மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில் அத்துமீறி காடுகளை அழித்தல், பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல் என்பவற்றால் கால் நடைகளுக்கு மேய்ச்சல் தரை குறைந்து கொண்டு செல்வதைக் குறிப்பிட்டனர்.


மேலும் தமது மேய்ச்சல் தரை நிலம் பாதுகாக்கப்படாவிட்டால் தமது கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் போய் விடும் என்பதைக் கூறியதுடன்,

எனவே சட்ட விரோதமாக காடுகளை அழிப்பதை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.


இது தொடர்பாக அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், வனவளத் திணைக்கள பிராந்திய அதிகாரி மற்றும் கிராம சேவகர் ஆகியோருக்கு இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எடுத்துக் கூறினார்.


அவர்கள் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதனைக் கூறியிருந்தனர்.


அத்தோடு காடு அழிப்புகள் தொடர்பாக நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிடுவதற்காக காட்டு வழியினூடாகச் சென்று அவதானிக்கப்பட்டது.


இதன் போது காடு அழிப்புகள் தொடர்பாக சில பகுதிகளைப் பார்வையிட்டார், உரிய அதிகாரிகளிடம் இவ்விடயத்தை எடுத்துக் கூறியிருந்தார் .


அவர்கள் உடனடியாக அவ்விடத்திற்கு கிராம உத்தியோகத்தர், வனஜீவராசி கள உத்தியோகத்தர் ஆகியோரை அனுப்பி வைப்பதாக கூறினார்.


மட்டக்களப்பின் இயற்கை வளமான காடு அழிக்கப்பட்டால் காட்டு யானைகள் கிராமங்களை நோக்கியும், வருவதைக் தடுக்க முடியாமல் போய் விடும் இவ்விடயம் தொடர்பாக சில பயிர்ச்செய்கையாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது.


மேலும் சட்டப்படி பண்ணையாளர்கள் ,விவசாயிகள் நடந்த கொள்ளும்படி ஆலோசனை பாராளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்டது


உரிய நேரத்தில் கடிதங்கள் மக்களின் கையில் கிடைக்காத பின்னணி என்ன?

 






தபால் ஊழியர் இன்மையால் அல்லலுறும் பன்குடாவெளி,இலுப்படிச்சேனை,பாலர்சேனை,காயன்குடா,கொடுவாமடு, தம்பானம்வெளி,மயிலவெட்டுவான்,மாவடிஓடை, பாலர்சேனை போன்ற கிராமங்களுக்கு உரிய நேரத்தில் கடிதங்கள் சென்றடைவதில்லை இரண்டு பேர் வேலை செய்த அலுவலகத்தில் தற்போது ஒருவரே கடமை புரிகின்றார் 8 பாடசாலைகள் உள்ளது நான்கு ஆர்மி கேம் உள்ளது ஆயுள்வேதவைத்தியசாலை உள்ளது கமநல சேவை நிலையம் உள்ளது மூன்று நூலகம் உள்ளது வனவள அதிகாரி அலுவலகம் இது அனைத்துக்கும் ஒருவரே கடிதம் ஒப்படைக்க வேண்டும் காலாவதியான கடிதங்களே இவர்களின் கைகளில் கிடைக்கின்றன.



பன்குடாவெளி உப தபால் அலுவலகத்தில் இரண்டு பேர் தபால் ஊழியர்களாக கடமை புரிந்து வந்தனர் தற்போது ஒருவரே கடமை புரிகின்றான்ர் மக்களுக்கு உரிய நேரத்தில் கடிதம் கிடைப்பதில்லை என்னும் குற்றச்சாட்டை மக்கள் ஊடகத்திற்கு தெரிவித்தனர்