Tuesday, February 17, 2026

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாண்மையாளர்களை அபிவிருத்தி!






கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாண்மையாளர்களை அபிவிருத்தி செய்யும் இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி  இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர்  பேராசிரியர் பி.பிரதீபன் தலைமையில் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் செயலாளர் வை. எல். எம். நவவீயின் பங்கு பற்றுதலுடன் கிழக்கு  பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் (15) இடம் பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகமும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் தொழில்முயற்சியாண்மை, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான   இங்குபேசன் நிலையம் (Incubation Canter) கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீட வளாகத்தில் எதிர்வரும் (25) திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின்  உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் இடம் பெறவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் வலுவான பிராந்திய பொருளாதார வளர்ச்சி உயர்த்துவதற்கு பெறுமதி சேர் பொருட்களின்  தரம் மற்றும் செயல்திறன் மதிப்பீடு, வணிகத் திட்ட வழிகாட்டுதல், சந்தை இணைப்பு உதவிகள், தயாரிப்பு சோதனைகள், பொதியிடல் வழிகாட்டுதல், லேபளிங் மற்றும் பிராண்டிங் ஆலோசனை வழங்கள், தொழில்முனைவோருக்கான பயிற்சி திட்டங்கள் போன்ற பல தரப்பட்ட  சேவைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடாதிபதி டுலங்க மேனிக்கே குணுபோலகம, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் அமரசிங்கம் பகீரதன்,  விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட விதாதா உத்தியோகத்தர் கே. இலக்கணக்குமார், பிரதேச செயலக விதாதா உத்தியோகத்தர் மற்றும் பலர்  கொண்டனர்.

இவ் இங்குபேசன் நிலையத்தினால் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகள், ஆரம்ப நிலை நிறுவனங்கள், இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME) அபிவிருத்தி நிலையம் செயற்படவுள்ளதுடன் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு பாரிய பங்களிப்பு வழங்கப்படவுள்ளது.

Sunday, February 8, 2026

கராத்தே துறையில் பெருமைமிகு சாதனை !!!







  Japan Karate Do Shotokan Study  கழகத்தினரால் 

 கிரான் மத்திய கல்லூரியில் மட்டக்களப்பு  மாவட்ட மாணவர்களுக்கான தரப்படுத்துதல் பரீட்சை  நடாத்தியது.


இத் தரப்படுதல் பரிட்சை கழகத்தின்  தலைமை போதனை ஆசிரியரான ஹெச். எம். விஜயகுமார

 அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இப் பரிட்சைக்கு பயிற்றுவிப்பாளர்களான எம். நடராஜர் ,டீ. சதானந்தகுமார் ,ஏ. ஆர். நவாஸ் , எஸ். சகாயராஜா ,ஆகியோர் மேற்பார்வையில் மட்/வாழைச்சேனை இந்து கல்லூரி தேசிய பாடசாலை கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு  கருப்பு நிறம் பட்டி  (1st Dan)  பெற்றுக் கொண்டனர்.


இவர்களுக்கான கருப்பு நிறபட்டி அணிவிக்கும் கௌரவ நிகழ்வு நேற்று (8)தினம்Japan Karate Do Shotokan Association-இன்தெற்காசியாவுக்கான தலைமை போதனா ஆசிரியரும்,தெற்காசியாவுக்கான பரீட்சகருமானஅவர்களால் மிகுந்த மரியாதையுடன் கருப்பு நிற பட்டி  அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Saturday, February 7, 2026

காகித நகர் மில்லத் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா !!







கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/ காகித நகர் மில்லத் வித்தியாலயத்தின் 25 வது வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழா நிகழ்வுகளில் புதிய நூலகம் திறந்து வைப்பு, சிறப்பு மலர் வெளியீடு, கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று 2026/02/02ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு விமர்சையாக நடைபெற்றது.

வித்தியாலய பழைய மாணவர்கள், பிரதேச தனவந்தர்களின் முழு பங்களிப்புடனும், பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்படனும் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.றிஹாஸ் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் (SLEAS) சிறப்பித்ததுடன், கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்ஷுக் (SLEAS), கோறளைப்பற்று பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் (SLEAS) , மற்றும் விஷேட அதிதிகள், சிறப்பு அதிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், ம.ம.கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், வித்தியாலய முன்னாள் அதிபர்கள், வித்தியாலய முன்னாள் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் (ஏ.எல்.எம்.சப்றாஸ்), பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வித்தியாலயத்தின் முதன் முதலாக புதிய கோலாட்ட குழுவினர் இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன்,  வித்தியாலயத்தின் கடந்த 25 ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டியில் மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவான மாணவர்கள், பிரதம அதிதி, வித்தியாலய அதிபர், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், தற்போதைய ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு நினைவுச் சின்னங்கள் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டன.

Tuesday, February 3, 2026

78 வது சுதந்திர தின நிகழ்வு!!


இலங்கை திருநாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வு  இன்று (04)








மட்டக்களப்பு கொக்குவில்-176 பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் பிரஜாசக்தி தலைவர்,கிராம அபிவிருத்தி உத்தியோஸ்தர், சமுர்த்தி  உத்தியோகத்தர் , கிராம சேவகர், கிராம சிறுவர்கள், பயிற்சிப்பாளர்கள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து  கொண்டனர்.


முன்னதாக பாடசாலை மாணவர்களின் இணைந்து சிரமதான பணிகளும்,  கொய்யா மரங்கள் வளாகத்துக்குள் நடப்பட்டது 


 சுதந்திர தின நிகழ்வில் இலங்கை நாட்டிற்கு  மரியாதை செலுத்தப்படும் வகையில் நிறைவுக்கு வந்தது.