நேற்று இரவு கொட்டாவ காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஜீப் ரக வாகனமானது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைக்கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளதுடன், முறையான வருமான வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிச் சான்றிதழ் அல்லது புகைப் பரிசோதனை அறிக்கை எதுவுமின்றி செலுத்தப்பட்டு வந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்த வாகனத்திற்காக போலியான ஆவணங்களைத் தயாரித்து, அவற்றைப்பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலும் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வித்தாரந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment