Wednesday, July 1, 2026
வளர்ப்புப் பிராணிகளைப் பதிவு செய்வது இனி கட்டாயம்
பதுளை அலுகொல்ல காட்டுத் தீ
மாணவர்களுக்கு 3,000 ரூபாய் பெறுமதியான காலணி வவுச்சர்: அமைச்சரவை அதிரடி அனுமதி!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
வருமான வரி அறிக்கை சமர்ப்பிப்பு இன்று முதல் ஆரம்பம்
2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிக்கும் பணிகள் இன்றைய தினம் முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, வருமான வரிக்காக பதிவு செய்துகொண்டுள்ள அனைத்து தனிநபர்களும் தங்களது வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வரி செலுத்துவோர் தங்களது வரி அடையாள இலக்கத்தை பயன்படுத்தி, இணையவழி ஊடாக இந்த அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், வருடாந்த வருமானம் 1.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக உள்ள அனைத்து தனிநபர்களும் வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐபோன்களுக்கும் சப்போர்ட்? : Samsung Galaxy Ring 2 குறித்து வெளியான முக்கிய தகவல்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான முதல் Galaxy Ring-க்கு பிறகு, அதன் புதிய பதிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது Samsung நிறுவனம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
Samsung நிறுவனத்தின் Digital Health பிரிவுத் தலைவர் ஹான் பாக் (Dr. Hon Pak), Galaxy Ring 2 தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதில் iPhone இணைப்பு (iOS Support) வழங்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை Galaxy Ring, Android சாதனங்களுடன் மட்டுமே செயல்பட்டு வந்தது. எனினும், Samsung Health மற்றும் Galaxy Wearable செயலிகள் iPhone-களுக்கும் வழங்கப்பட்டால், Galaxy Ring 2-ஐ iPhone பயனர்களும் முழுமையாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய Galaxy Ring 2-ல், மேம்பட்ட ஆரோக்கிய கண்காணிப்பு தொழில்நுட்பம், அதிக துல்லியமான தரவுகள் மற்றும் நீண்டகால பேட்டரி ஆயுள் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samsung Health செயலி மூலம் இரத்த ஒக்சிஜன் அளவு, இதயத் துடிப்பு, தூக்கத்தின் தரம் மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகள் உள்ளிட்ட உடல்நலத் தகவல்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
மேலும், 2027ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் AI Health Coaching வசதி, பயனர்களின் அன்றாட பழக்கவழக்கங்களை பகுப்பாய்வு செய்து, தனிப்பயனாக்கப்பட்ட உடல்நல ஆலோசனைகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்கும் என Samsung தெரிவித்துள்ளது.
அதோடு, நிறுவனத்தின் SmartThings தளத்துடன் ஒருங்கிணைத்து, பயனர்களின் உணவுப் பழக்கங்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் ஆரோக்கியமான சமையல் ஆலோசனைகளையும் வழங்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'முத்து' என்ற வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் பலி
உயிரிழந்தவர் மெனிக்ஹின்ன முடுங்கோத் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் மாமா ஆவார்.
யானை கட்டப்பட்டிருந்த இடத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்து ரொட்டியை எடுத்து, இந்த நபர் யானைக்கு உணவளிக்க முயன்றபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யானை தாக்கியபோது அங்கிருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்றக் கடுமையாகப் போராடியும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
தாக்குதலுக்கு பின்னர் யானை அதே இடத்திலேயே தொடர்ந்து நின்றுகொண்டிருந்ததால், சம்பவ இடத்திலிருந்து உடலை மீட்பதற்கு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வரை போராடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் மனித உயிர்களைப் பறித்த இந்த யானை, தற்போது தன்னை அன்போடு கவனித்து வந்த நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவரின் உயிரையும் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெல்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
: இலங்கையில் அதிரடியாகக் குறைந்த தங்க விலை!
நேற்று (30) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 379,000 ரூபாயாக குறைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 348,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,588 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் தொடர்ந்து பிரதிபலித்து வருவதால், தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.
அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 341.09 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று (30) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 341.30 ஆக காணப்பட்டது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் தீப்பரவல் - பெருமளவான பொருட்கள் சேதம்
குறித்த உணவகத்தில் திடீரென தீ பரவியதைக் கண்ட அப்பகுதி மக்களும் ஊழியர்களும் உடனடியாக மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், பொதுமக்களின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, உணவகத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தினால் உணவகத்தில் இருந்த தளபாடங்கள், சமையல் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. எனினும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மட்டக்களப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பரீட்சார்த்திகளுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகம் துரிதப்படுத்தப்படும் - ஆட்பதிவுத் திணைக்களம்
நடப்பு ஆண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த வருட இறுதிக்குள் நிரந்தர தேசிய அடையாள அட்டைகளை வழங்கி முடிப்பதற்குத் திணைக்களம் எதிர்பார்ப்பதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜகத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு ஊடாக ஏற்கனவே பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அதிபர்கள் எந்த வித தாமதமும் இன்றி இந்த விண்ணப்பங்களை திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை அடையாள அட்டை கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் ஊடாக திணைக்களத்தைத் தொடர்புகொண்டு தங்களது அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தேசிய பரீட்சைகள் தொடங்குவதற்கு முன்னர் அனைத்து மாணவர்களும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகளை வைத்திருப்பதை உறுதி செய்வதே இந்த விசேட திட்டத்தின் நோக்கம் என ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
தானசாலை வரிசை கலவரம்: இளைஞரைத் தாக்கிய 16, 17 வயதுடைய ஐவர் கைது
கொழும்பு பங்குச்சந்தை வெளியிட்ட அவசர அறிவிப்பு!
அமெரிக்கா மற்றும் கனடாவில் தீவிரமடையும் கடும் வெப்ப அலை: 120 மில்லியன் மக்களுக்கு எச்சரிக்கை
விசேட தேவையுடையோருக்கு விசேட அடையாள அட்டைகள்!
விசேட தேவையுடையோருக்கான தேசிய சபை இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.
பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!