வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, இந்த நிலநடுக்கத்தால் மேலும் 971 பேர் காயமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
7.2 மற்றும் 7.5 ஆகிய மெக்னிடியூட் அளவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.
இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment