Wednesday, June 17, 2026

கொட்டகலையில் பதற்றம்! இரு தரப்பினரிடையே மோதல் – 7 பேர் கைது

 

நுவரெலியா - கொட்டகலை நகரில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டகலை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்குச் சென்றவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோதலில்; ஈடுபட்ட 03 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் மோதல் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவி காவல்துறை அத்தியட்சகர்  குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் திம்புலபத்தன காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment