ஈரான் தொடர்பான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியானது, உலக நாடுகளில் மின்மயமாக்கலை நோக்கி நகர்த்துவதை ஊக்குவிக்கும் என சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர் ஃபாத்தி பிரோல் (Fatih Birol) தெரிவித்துள்ளார்.
நாடுகள் தங்களின் உள்நாட்டு எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களின் விலை அதிரடி மாற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இந்த நடவடிக்கை உதவும்.
தற்போதைய நெருக்கடி காரணமாக பல அரசாங்கங்கள் தங்களது எரிசக்தி உத்திகள், கொள்கைகள், கூட்டாண்மைகள் மற்றும் தொழில்நுட்பத் தெரிவுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன.
இந்த உலகளாவிய நெருக்கடியானது, மின்சார ஆற்றலைப் பயன்படுத்துவதை நோக்கிய நகர்வுக்கு ஒரு கூடுதல் உந்துதலை வழங்கும் என அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment