மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(10) செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.
இப்போட்டியானது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் இடம் பெற்றது மற்றும் புளியந்தீவு மெதடிஸ் தேவாலயே தலைமை போதகர் ஏ.சேம் சபேந்திரன் அவர்களின் இறை பிரார்த்தனையுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன.
இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பிரதி பணிப்பாளர் என். குகதாசன், இலங்கை 38-வது இராணுவபடை அதிகாரி மேஜர் கே. எம். தமீம் அவர்களும் கௌரவ அதிதிகளாக. மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான
உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், முன்னாள் பாடசாலை பழைய மாணவர் சங்கத் தலைவர் வை.கோபிநாத் , பாடசாலையின் செயலாளர் யூ.மயூரன், மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான ஆசிரியர்களின் ஆலோசகர் கே.ரவீந்திரன்,சாட்டர்லைட் விளையாட்டுக் கழக தலைவர் சக்திரமணன், லண்டனின் உள்ள சாட்டர்லைட் உறுப்பினர் ஜி. ஜீவகுமார் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இவ் விளையாட்டு போட்டியின் முடிவில் காட்மன் இல்லம் 357 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,சோமநாதர் இல்லம் 349 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,
ஓல்ட் இல்லம் 313 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும்,
கோல்டன் இல்லம் 292 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இப்போட்டிகளில் இடம் பெற்ற ஆயுதங்களை ஏந்திய வண்ணமான அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(ஆர்.நிரோசன்)

0 comments:
Post a Comment