கடந்த 2010ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்களுக்குப் புகையிலைப் பொருட்களை முற்றாகத் தடை செய்யும் 'புகையிலை இல்லா தலைமுறை' கொள்கை முன்மொழிவு, இன்னும் அமைச்சரவை அங்கீகார நிலைக்கு முன்னேறாமல் தாமதிக்கப்பட்டு வருவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கவலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டு "புகையிலை தொழிற்துறையின் தலையீடுகளை வெளிக்கொணருவோம், புகையிலை மற்றும் நிக்கோடின் உற்பத்திகளுக்கு எதிர்ப்பினை தெரிவிப்போம்" என்ற தொனிப்பொருள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களைக் குறிவைக்கும் இலத்திரனியல் சிகரட்டுகள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை நிக்கோடின் அடிமைகளாக மாற்றுவதற்காக, புகையிலைத் தொழில்துறையினர் "குறைந்தளவிலான பாதிப்பு" என்ற போலிப் பிரசாரத்துடன் இலத்திரனியல் சிகரட்டுகளை நவீன வடிவில் சந்தைப்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய வியாபார நுணுக்கங்கள் நிக்கோடின் பயன்பாட்டை சாதாரணமாக்குவதோடு, பொதுச் சுகாதார நடவடிக்கைகளையும் பலவீனப்படுத்துகின்றன.
0 comments:
Post a Comment