ஹம்பாந்தோட்டை ஹூங்கம - களமெட்டிய கடற்பரப்பில் நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன மூன்று சிறுவர்களில் இருவரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடலில் நீராடச் சென்ற 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இருவரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல்போன மற்றுமொரு சிறுவனைத் தேடும் பணிகள்தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment