கொழும்பு காலிமுகத்திடல் கடலில் இன்று (10) நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு, மீட்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு சிறுவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள மற்றுமொரு சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று மாலை காலிமுகத்திடல் கடற்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்தச் சிறுவர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
0 comments:
Post a Comment