ரிதீமாலியத்த, லொக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் வள்ளமொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும் பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவருமே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டியிலிருந்து சென்ற 33 பேர் கொண்ட குழுவினர், நேற்று (28) காலை லொக்கல் ஓயா நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள தனியார் சுற்றுலா தளம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், அந்த குழுவினர் நீராடுவதற்காக நீர்த்தேக்கத்தின் நடுவே உள்ள இடமொன்றுக்கு செல்வதற்கு, இரண்டு சிறிய வள்ளங்களை ஒன்றாக இணைத்து அமைக்கப்பட்ட ஒழுங்கற்ற வள்ளமொன்றை ஒன்றைப் பயன்படுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியிலிருந்து கரைக்கு திரும்பும் போது, இந்த வள்ளம் திடீரென கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து நடந்த சமயம், மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் அதில் பயணம் செய்துள்ளனர். இதில், உயிரிழந்த இருவர் உயிர் காக்கும் அங்கிகளை அணியவில்லை எனவும், அவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
காவல்துறை மற்றும் அந்த பகுதி மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், இருவரும் உடலங்களாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment