ஜேர்மனியின் வடக்கே உள்ள ஸ்டேட் (Stade) நகரில் அமைந்துள்ள இளைஞர் மன்றம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் சந்தேகநபர் என்றும் காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் வயது அல்லது தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இருப்பினும், தற்போது பொதுமக்களுக்கு மேலதிக அச்சுறுத்தல் ஏதுமில்லை என காவல்துறை உறுதியளித்துள்ளது.
சம்பவ இடத்துக்கு பெருமளவிலான அவசரகாலப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment