அரச சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கும், அரச அதிகாரிகளின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்குமான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்ட நடவடிக்கைகள் அதிகாரிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் சேனாரத்ன ஆகியோரின் தலைமையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.
பொதுச் சேவைகளில் காணப்படும் தேவையற்ற தாமதங்களைக் குறைத்து, அதன் வினைத்திறனை மிக உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு வருவதே இந்த தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகளை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றுவதன் ஊடாக, மக்களுக்கு மிக வேகமான மற்றும் சுமுகமான சேவைகளை வழங்க இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment