Saturday, June 6, 2026

நுரைச்சோலை பகுதியில் கடல் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற மூவர் பலி!

 

புத்தளம், நுரைச்சோலை - தளுவ கடல் முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 19 வயதுடைய இரு இளம் பெண்களும், 24 வயதுடைய ஒருவருமே என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment