2026 உலகக் கிண்ண கால்பந்து தொடருக்காக, நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் போட்டிக்கு ஒரு நாள் முன்பாக ஈரான் தேசிய கால்பந்து அணி அமெரிக்காவுக்குப் புறப்படவுள்ளது.
ஜூன் 16-ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த போட்டிக்காக, ஈரான் கால்பந்து அணியின் வீரர்கள் அமெரிக்கா செல்வதற்கான விசாக்களைப் பெற்றுள்ளனர்.
இருப்பினும், அந்த பிரதிநிதிகள் குழுவை சேர்ந்த நிர்வாக மற்றும் மேலாண்மைப் பிரிவினர் 12-க்கும் மேற்பட்டோருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் அமீர் மெஹ்தி அலவி வெளியிட்ட அறிக்கையில், "FIFA அமைப்பின் திட்டத்தின்படி, ஈரான் அணி சிறப்பு வானூர்தி (Charter flight) மூலம் அமெரிக்காவுக்குப் பயணம் செய்யும். நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு ஒரு நாள் முன்பாக அணி போட்டி நடைபெறும் நகரத்தை சென்றடையும். அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டிகளுக்கு, போட்டி நடக்கும் இடத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நாங்கள் சென்றடைவோம்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ஈரான் அணி தனது உலகக் கிண்ணத்திற்கான பயிற்சி முகாமை திட்டமிட்டபடி அரிசோனாவில் உள்ள டக்சன் (Tucson) நகருக்குப் பதிலாக, மெக்சிகோவின் எல்லை நகரான டிஜுவானாவுக்கு (Tijuana) மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment