பிரபல உணவு உற்பத்தி நிறுவனமான சிபிஎல் குழுமத்தின் தலைவர் ரம்ய விக்கிரமசிங்க காலமானதாக அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ய விக்கிரமசிங்கவின் மறைவு குறித்து சிபிஎல் குழுமம் விடுத்துள்ள அஞ்சலி அறிக்கையில், அவர் ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர் என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் வெற்றிகரமான வணிகத்தை உருவாக்குவதற்குக் அப்பால், அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்றும் அவருடைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment