அனுராதபுரம் மாவட்டம், சங்கிலி கனதராவைப் பகுதியைச் சேர்ந்த, இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்.
1912 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி பிறந்த கலுமெனிகே, இந்த ஆண்டு தனது 114 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களில், அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் காயமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் உயிர் பிழைத்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது பின்னால் 12 பிள்ளைகளையும், 325 பேரப்பிள்ளைகள் வரையிலான மிகப்பெரிய குடும்ப வம்சாவளியையும் கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment