கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,309 ஆக உயர்ந்துள்ளதுடன், மொத்தப் பாதிப்புகளின் எண்ணிக்கை 2,973 ஆக அதிகரித்துள்ளது.
மனிதர்களைப் பாதிக்கும் எபோலா வைரஸ் வகைகளில் மிகவும் அரிதான Bundibugyo வகை வைரஸே அங்குப் பரவி வருவதுடன், இதற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இதுவரை கண்டறியப்படவில்லை.
மோதல் நிறைந்த பகுதிகளில் இந்த வைரஸ் பரவி வருவதால், பொதுச் சுகாதார வளங்களின் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் காரணமாக வைரஸைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அவசரமாக உருவாக்கியுள்ள பரிசோதனைத் தடுப்பூசியொன்று, முதன்முறையாகத் தன்னார்வலர் ஒருவருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment