Thursday, July 16, 2026

சொகுசு சிற்றுந்து தீ விபத்து

 

குருணாகல் பாடசாலை வளாகத்தில் 140 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிற்றுந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிற்றுந்தை தீயிட்டுக் கொளுத்தியது அங்கிருந்த மாணவன் தான் என சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளுக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவனுக்கு எதிராக நேரில் கண்ட சாட்சிகளோ அல்லது அறிவியல் சான்றுகளோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் உதவி நாடப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment