Friday, July 17, 2026

நுவரெலியா வரலாற்றுச் சிறப்புமிக்க அஞ்சல் அலுவலகத்தில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

 


நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தின் கூரை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறைத் தலைவர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்துகுமாரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தின் தரைத்தளமானது, அஞ்சல் அலுவலகம், முத்திரைத் துறை, அருங்காட்சியகம், உணவகம் மற்றும் நினைவுப் பொருட்கள் வாங்கும் இடமாக மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக மேல் தளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையிலும் சுற்றுலா வாரியத்தின் வழிகாட்டுதலுடனும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அஞ்சல் துறைத் தலைவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment