லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
457 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, போட்டியின் கடைசி நாளில் 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் இந்திய மகளிர் அணியின் சார்பில் சினேகா ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அத்துடன் தீப்தி சர்மா இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
குறித்த போட்டியில் இந்திய வீராங்கனை கிராந்தி கௌட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும், யாஸ்திகா பாட்டியா சதம் அடித்தும் லோர்ட்ஸ் மைதானத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
சிறப்பாக விளையாடிய யஸ்திகா 158 பந்துகளில் 113 ஓட்டங்களைக் குவித்து லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற உலக சாதனையை நிலைநாட்டினார்.
லோர்ட்ஸில் ஆடவர் டெஸ்ட் போட்டிகள் தொடங்கி 142 ஆண்டுகள் மற்றும் 150 போட்டிகளுக்குப் பிறகு, அங்கு நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment