Tuesday, May 26, 2026

நாளை 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி

 

தென் மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால், தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் நாளை (27) 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment