எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பேருந்து கட்டணங்களில் இடைக்கால திருத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஆண்டுதோறும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் வழக்கமான பேருந்து கட்டண திருத்தத்திற்கு முன்னதாக இந்த இடைக்கால திருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்படி, வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்களை 5 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது காணப்படும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 32 ரூபா அல்லது 33 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்து உரிமையாளர்கள் தற்போது ஒரு பயணத்திற்கு சுமார் 25 ரூபா நஷ்டத்திலேயே சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment