டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் இன்னும் எவ்வித ஆயத்தமும் இல்லை என கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் அமித் குமார் கவலை வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இதனை தெரிவித்த அவர், ஆங்காங்கே கண்டறியப்படும் நுளம்பு குடம்பிகளின் எண்ணிக்கையை பார்க்கையில் பொதுமக்கள் டெங்கு ஒழிப்புக்கு தயாரில்லை என்பது புலப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அபராதம் விதிப்பதன் மூலமோ அல்லது புகை விசிறல் மூலமோ மட்டும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதற்குப் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார்.
டெங்குவினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை எம்மால் எண்ணிக் கணக்கிடக் கூடிய வகையிலேயே உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், நுளம்புகள் பெருகும் இடங்களைக் கட்டுப்படுத்தாமல் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.
0 comments:
Post a Comment