கண்டி நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக Lanka Metro Bus திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் கண்டி பன்முக போக்குவரத்து முனையத்தை (Multimodal Transport Terminal) மையமாகக் கொண்டு, முன்னுரிமைப் பாதைகளின் (Priority Lanes) ஊடாக 4 பிரதான வீதிகளில் இந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன மெட்ரோ பேருந்து திட்டம் டிஜிட்டல் தகவல் அமைப்புகள், பயணிகள் இலகுவாகப் பேருந்தில் ஏறுவதற்கான பிரத்தியேக மேடைகள், மற்றும் ஸ்மார்ட் கார்ட் தொழில்நுட்பம் (Smart Card Technology போன்ற சில அதிநவீன வசதிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.
வரலாற்றுப் பாரம்பரியமிக்க கண்டி நகரின் தொன்மையைப் பாதுகாக்கும் அதேவேளை, பொதுமக்களுக்குத் திறனான, பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து சேவையை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
0 comments:
Post a Comment