நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, நாளை (15) முதல் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள இந்த விசேட தூய்மையாக்கல் வேலைத்திட்டம், ஜூன் மாதம் 20ஆம் திகதி வரை தொடரவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஜூன் 18ஆம் திகதி கல்வி நிறுவனங்களில் நுளம்பு பெருகும் இடங்களை அழிக்கும் விசேட வேலைத்திட்டமும், ஜூன் 19ஆம் திகதி அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சுற்றியுள்ள வளாகங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் இறுதி நாளான ஜூன் 20ஆம் திகதியன்று, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழலைத் தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டத்திற்குப் பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment