மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னையின் நீலாங்கரையில் அமைந்துள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவராக விளங்கிய பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று தனது 84ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு தனது இரங்கல் செய்தியில்,
“அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட, பலராலும் மதிக்கப்பட்ட மாபெரும் இயக்குநரை இந்திய திரையுலகம் இழந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நடிகை ரேவதியும் பாரதிராஜாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவரது படைப்புகள் என்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கிராமிய வாழ்வியலை திரையில் உயிர்ப்பித்த இயக்குநராக போற்றப்படும் பாரதிராஜா, ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’ உள்ளிட்ட பல மறக்க முடியாத திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர்.
பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், உலகெங்கிலும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment