ஹொரணை, கொபவகவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மிகவும் நுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையொன்று வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இடம்பெற்று வந்த இந்த சட்டவிரோத செயற்பாடு குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், இரத்தினக் கல் வர்த்தகர்கள் மூவர் உட்பட 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட 11 படகுகள், 5 மோட்டார்கள் உட்பட சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான பல்வேறு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பனவும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment