தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13 அதிகாலை ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் சிக்கி குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற்ற மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல், "தீப்பரவல் ஏற்பட்டபோது விடுதி முழுவதும் புகை வேகமாகப் பரவியுள்ளது.
அங்கிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது, போதிய அவசரக்கால வெளியேறும் வழிகள் இல்லாததால் கழிவறைகளுக்கு அருகில் சிக்கிக்கொண்டனர்.
இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தீப்பரவலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அதிகாரிகளை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment