Wednesday, July 1, 2026

மாணவர்களுக்கு 3,000 ரூபாய் பெறுமதியான காலணி வவுச்சர்: அமைச்சரவை அதிரடி அனுமதி!

 

எதிர்வரும் 2027ஆம் ஆண்டிற்காகத், தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு தலா ஒரு ஜோடி காலணிகளை (Footwear) வழங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.

தகுதியுடைய ஒவ்வொரு மாணவருக்கும் காலணிகளைக் கொள்வனவு செய்வதற்காக தலா 3,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முறையைப் போன்றே இம்முறையும் விநியோகம் இடம்பெறும்.

மேல், தென், சபரகமுவ, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் ஊடாக பாடசாலை மட்டத்திலேயே காலணிகள் விநியோகிக்கப்படும்.

மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாணவர்கள் சந்தையிலிருந்து நேரடியாகக் காலணிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.

இந்த திட்டத்தை 2026ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணை முடிவடைவதற்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் (2025/2026) இரு வேறு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த உதவித் திட்டத்தின் மூலம் 836,571 பாடசாலை மற்றும் பிரிவெனா மாணவர்கள் பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment