அனைத்துப் பயணிகள் பேருந்துகளும் 5,000 கிலோமீற்றர் தூரம் பயணித்த பின்னர் அவற்றை ஆய்வு செய்வதைக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில், சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் வாகன தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக நாட்டில் பல விபத்துகள் சம்பவித்துள்ளன.
இவ்வாறான சூழலில், வாகனக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.
இதற்கிடையில், புதிய பேருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் தனியார் பேருந்துத் தொழிலை அழிக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment