Tuesday, July 28, 2026

எல் நினோ தாக்கம்: நீர் மற்றும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தல்!

 


எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் வெப்பநிலை அதிகரிப்பதுடன் மழைவீழ்ச்சியும் குறையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இந்த எல் நினோ தாக்கம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 35 பாகை செல்சியஸைக் கடந்துள்ள நிலையில், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையான காலப்பகுதியில் பொதுமக்கள் நேரடியாக வெயிலில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீர்நிலைகளின் நீர்மட்டம் குறையக்கூடும் என்பதால், நீர் மற்றும் மின்சாரத்தைப் பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment