Tuesday, July 28, 2026

பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்!

 

நாட்டின் சில பகுதிகளில் நாளை (29) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் 'எச்சரிக்கை நிலையை' எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, நிலவும் வெப்பமான வானிலை தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 comments:

Post a Comment