அத்துருகிரிய ஹபரக்கட - சிறிலலங்கார மாவத்தை பகுதியில் இன்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் உணவகமொன்றின் உரிமையாளர் எனவும் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு நபர்களே இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட காவல் துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment