எனினும், இங்கிலாந்து சென்ற பின்னர் பயிற்சி போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் தனது உடற்தகுதியை நிரூபிப்பார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, காயமடைந்த வீரர் ஒருவரை தேசிய அணிக் குழுவில் இணைப்பதற்கு முன்னர், பல கட்ட உடற்தகுதி பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, அவர் போட்டிகளில் விளையாடுவதற்குத் தயாராக உள்ளார் என்பது உறுதி செய்யப்படுவது தேசிய தேர்வுக் குழுவின் நடைமுறையாகும்.
ஆனால், குழு தெரிவு செய்யப்பட்டபோதும் குசல் மெண்டிஸ் உடற்தகுதி பரிசோதனைகளில் பங்கேற்கவில்லை என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது இருபதுக்கு 20 போட்டிக்கு முன்னதாக, இலங்கை அணி இங்கிலாந்தில் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது.
அந்தப் பயிற்சி போட்டிகளுக்குப் பின்னர் குசல் மெண்டிஸின் உடற்தகுதி மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment