Tuesday, September 1, 2026

நேபாளத்துக்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

 

நேபாளத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய உயிரிழப்புகள், சொத்து அழிவுகள் மற்றும் தொடரும் மனிதாபிமான சவால்களைக் கருத்திற்கொண்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளின் அடிப்படையிலும் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இந்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட இந்த அனர்த்தத்தின் காரணமாகக் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதுடன், உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்களை எதிர்கொள்ளவும், நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் இந்த நிதி உதவி பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment