Thursday, September 3, 2026

பொரளை – சஹஸ்புர பகுதியில் காவல்துறை துப்பாக்கிச்சூடு : ஐவர் கைது

 

பொரளை – சஹஸ்புர பகுதியில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
 
கொம்பனித்தெரு பகுதியிலிருந்து பிரவேசித்த முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு பொரளை போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் கட்டளையிட்டுள்ளனர்.
 
இந்த கட்டளையை மீறி குறித்த முச்சக்கர வண்டி முன்னோக்கிப் பயணித்துள்ளது.
 
இதன்போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதுடன் அதில் பயணித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைதானவர்களிடமிருந்து கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 

கைது செய்யப்பட்டவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடச் சென்றிருக்கக்கூடும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment