நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவின் ஜா-எல - வெலிகம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீட்டுக்கு அருகில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (01) முற்பகல் குறித்த கால்வாய் அமைந்துள்ள பகுதியில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜா-எல நகர சபையின் ஊழியர்களால் குறித்த கால்வாயை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஊழியர்களுக்கு இந்த கைக்குண்டு தென்பட்டுள்ளதுடன், அவர்கள் உடனடியாக இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர், குறித்த கைக்குண்டு காவல்துறை விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழப்பு பிரிவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment