செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது "புதிய வடிவ அடிமைத்தனத்தை" தோற்றுவிப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை 14ஆம் லியோ எச்சரித்துள்ளார்.
பூகோள அரசியல் மற்றும் வர்த்தக ஆதிக்கத்திற்காக சக்திவாய்ந்த அல்காரிதம்களை உருவாக்குவதை விடுத்து, AI தொழில்நுட்பத்தை உடனடியாக "ஆயுதமற்றதாக்க" (Disarm) வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வத்திக்கானில் அவர் வெளியிட்ட “Magnifica Humanitas” (மகத்துவமிக்க மனிதநேயம்) என்ற தனது முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைக்களஞ்சிய (Encyclical) போதனை அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிக்கம் மற்றும் மரணத்திற்கான ஒரு கருவியாக AI மாறுவதிலிருந்து அது விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அணுசக்தியைப் போலவே இதுவும் மனிதகுலத்தின் பொதுவான நன்மைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் தன்னாட்சிப் போர்முறைகளுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வரும் முன்னணி AI நிறுவனமான Anthropic இன் இணை நிறுவனர் கிறிஸ்டோபர் ஓலா (Christopher Olah), திருத்தந்தையின் இந்த அறிக்கையை வரவேற்றுள்ளார்.
வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் சிக்கலான AI செயல்பாடுகள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் 'நியாயமான போர்' (Just War) என்ற கோட்பாடு முற்றிலும் காலாவதியானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், எந்தவொரு அல்காரிதமும் ஒரு போரை தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக மாற்றிவிட முடியாது என்றும், உயிரைப் பறிக்கும் தீர்மானங்களை தொழில்நுட்பத்திடம் ஒப்படைக்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment