Monday, June 1, 2026

வெசாக் தின விபத்துக்கள்: இரு நாட்களில் 24 பேர் பலி – 13 பாதசாரிகள் உயிரிழப்பு!


 கடந்த மே 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 19 வீதி விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டப்ளியூ.பீ.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.


இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்தத் திடுக்கிடும் புள்ளிவிபரங்களை வெளியிட்டார்.

குறித்த இரு தினங்களில் பதிவான ஒட்டுமொத்த விபத்துக்களில்
கடந்த 2 நாட்களில், 19 வீதி விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் 29 கடுமையான விபத்துக்களும், 96 சிறிய விபத்துக்களும், 19 சேத விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த வீதி விபத்துக்களுடன் தொடர்புடைய வாகனங்களில் உந்துருளிகளே அதிகளவில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோட்டார் சைக்கிள்கள் 15, முச்சக்கரவண்டிகள் 03, பாரவூர்திகள் 02, தனியார் பேருந்துகள் 02, கெப் ரக வாகனங்கள் 01 என்பன விபத்துக்குள்ளாகியுள்ளன.

உயிரிழந்த 24 பேரில் அதிகளவானோர் வீதியில் நடந்து சென்ற பாதசாரிகள் என்பது விசேட அம்சமாகும்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் (நடந்து சென்றவர்கள்) 13 பேர், உந்துருளி ஓட்டுநர்கள் 07 பேர், உந்துருளியின் பின் ஆசனத்தில் பயணித்த பயணிகள் 01, மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டுநர் 01 நபர், வாகன ஓட்டுநர்கள் 01, வாகனப் பயணிகள் 01 ஆவர்.

பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும் போதும், வீதிகளில் பயணிக்கும் போதும் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் அதிக அவதானத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் எனப் பிரதி காவல்துறை மா அதிபர் இங்கு மேலும் வலியுறுத்தினார்.

0 comments:

Post a Comment