Monday, June 1, 2026

புத்தளம் பாதையில் தொடருந்து தடம் புரண்டது

 

தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக, புத்தளம் வழித்தடத்தில் இயக்கப்படும் தொடருந்துகள் கொழும்பு கோட்டையிலிருந்து மாதம்பே வரை மட்டுமே இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை 9.30 மணிக்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் புறப்பட்ட தொடருந்து, பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் சிலாபம் தொடருந்து நிலையத்திற்குள் நுழையும்போது தடம் விலகியது.


இந்தச் சம்பவத்தின் காரணமாக, புத்தளம் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து தொடருந்துகளின் இயக்கமும் தற்காலிகமாக மாதம்பே தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment