Saturday, June 13, 2026

பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஆரம்பம்!

 

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அதன் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நிலுவைத் தொகையுடனான இக்கொடுப்பனவை வழங்கும் பணிகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment