Monday, June 8, 2026

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

 

நடப்பாண்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏற்கனவே அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சில அரிசி வகைகளின் விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதரபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதனிடையே, சிறு போகம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தை கடந்துள்ளது.

எனினும் கடந்த பெரும் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை இதுவரை விற்பனை செய்ய முடியாதமையால் விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment